அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for the 'இதயத்தின் ஓசைகள்' Category

காதல் தேவதை

கனவினில் வளர்பிறையாய் வந்தவள்
விழிவழி மலர்கணை தொடுக்க…
சிந்தையில் காதல் விருந்தொன்று!

பிறைவடம் சூடி பூவையவள்…
சோலையாய் அருகில் வந்தாள்!
பொய்கை வண்டாய் மனம் பறக்க…
தோள்வளை பற்றி கூட்டி வந்தாள்!

ரதியினம் மண்டியிடும் வதனம் இவள்…
மயக்கும் மழலை பேச்சி இவள்…
மன்மத வாகனம் இவள்…
எந்தன் கவிதைகளின் முகவரி இவள்!

காதல் தேவதை
உந்தன் விரல்கள் எழுதும் சுகவரிகள்…
உள்ளத்தில் இன்ப மழை தூவ…
நெஞ்சினில் காதல் நதியின் ஊற்று!

உன் மரகத அதரம் தந்த மதுரசம்…
காதல் போதையில்!
உன்பெயரே இசைத்தபடி…
தள்ளாடுதே என் இதயம்!

காதல் பிணிக்கு மருந்தானாய்…
உந்தன் இதய வாசனை அறிந்தேன்!
காலங்கள் ஓடினாலும்…
உன் நினைவின்றி நகராதே என் நாட்கள்!

காதல் தனிமை

கவிதையில் சொல்லாத காதல்
உன் விழியின் நளினத்தில் நீ சொல்ல!

கொஞ்சம் மைபூசி கொஞ்சி மெய் பேசும்
விழியினை யார் என்று வியந்து நான் கேட்க!

செங்காந்தள் கரங்கள் எனை தீண்ட
மின்காந்தம் உடலோடு பாய மெய்மறந்தேன்!

சங்கீத பேச்சிக்கள் காதோரம் இசைக்க
அங்கத்தில் காதல் அரும்புகள் பூக்க!

செந்தூரம் சிந்தாதேன் சிந்தும்
மதுர இதழ்கள் இணைசேர!

மனதோடு அந்திப்போர் நிகழ
உயிர்பருகி வெற்றி கனி பறித்து சென்றாய்!

உயிரற்ற உடல் இன்றும்
உன்வரவை நோக்கி தனிமையில் துடித்தபடி..!

தனிமையின் பிடியில்

மயக்கும் மாலை
கதவோரம் நீ!
உன் ஜாடை
மோகமாய் தைக்க…
கரங்களில் நீ!

விரதம் விட்ட நம்விரல்கள்
காதல்வீணை மீட்ட!
பசித்திருந்த இதழ்கள்
பசியாற…
தனித்திருந்த தேகம்
இணைசேர…
காதலின் சாரல்
அனலாய் உடலெங்கும்!
காதோரம் உன் சுவாசம்
உள்ளம் சிலிர்க்க…
விழி திறந்தேன்!

தனிமை கட்டில்…
பக்குவமாய் மடித்து
வைத்த உன் உடைகள்…
அறையெங்கும் அலங்கரிக்கும்
உன் கைவண்ணம்!
பார்த்து சிரிக்க…!
விழிகளில் நீர்கசிய…
உணர்ந்தேன்…
தனிமையின் பிடியில் நான்…!

மௌன மொழிகள்

கண்கள் தீண்ட
காதல் ஊற்று!
கவிதையாய் வழிந்தோட
வார்த்தைகள் அணைபோட!
சிக்கிக்கொண்டு தவிக்குதடி
என் காதல்!

ஓரடிக்கோரடி உன்பெயர்
முனுமுனுக்கும் இதயம்!
காரணம் கேட்டால்
காதல் என்று பிதற்றும்!
சிந்தையில் ஆயிரமாயிரம்
எண்ணங்கள் பூக்கும்!
கவிதை வடிக்க எத்தணித்தால்
ஒளவியம் கொண்ட மொழியோ
சொல் தர மறுக்கும்!

என்செய்வேன் அன்பே?
ஆ… முத்தம் ஒன்று
தந்துவிடவா?
நம் உதடுகள் உரசும்
வேளையில்!
என் இதயத்தின்
மௌன மொழிகளை
மொழிபெயர்த்திடு அன்பே!

அழியா நினைவுகள்

நீரோட்டமாய் உந்தன்
நினைவோட்டம்
மனதை சுண்டி இழுக்க!
நெஞ்சமோ
காதல் மரக்கலம் பற்ற
நினைவலையில்
தொடங்கியது பயணம்!

செங்கதிர் குமிளும் அந்தி
நாவாயில் துயிலும் நீ!
மெய்மறந்து நான் இரசிக்க!
குறும்புக்கார தென்றல்
வாடையாய்
உன் முகந்தழுவ!
பிரிந்தது இமைகளா?
இல்லை
மின்காந்த இழைகளா ?
பார்வை தீண்டியதும்
பாயுதடி மின்சாரம் என்னுள்!

விழியோடு விழி கலந்து
விரலோடு விரல் கோர்த்து
இதழோடு இதழ் சேர்த்து
தோள்மீது உனை சாய்த்து
நாவாயில் நாம் கொஞ்ச
அந்த வான்மகளும்
வெட்கப்பட்டே மறைந்தாள்
நம் காதலின் நெருக்கம் கண்டு!

காதலின் சுமைதனில்
விழிகள் பனிக்க
மீண்டு வந்தேன் நிகழ்காலத்துக்கு!
நினைவலைகள் அடங்கினாலும்
யுகங்களே கடந்தாலும்
உந்தன் நினைவுகள் மட்டும்
என்னில் நீங்காதே!

என்னானதோ ஏனானதோ?

என்னானதோ ஏனானதோ!
என்னில் நான் அறியா நான் இன்று!
என்னானதோ என்னில் ஏனானதோ?

மழலை சிரிப்பில்
மந்திர பூக்களை சுவாசத்தில்
சிதறவிட்டாய்!
நரம்பெல்லாம் ஜில்லென
காதல் காற்று!
சிந்தையில் காதல் பித்து!
என்னானதோ என்னில் ஏனானதோ?

தேகமோ காதல் தீயில்
மெழுகாய் உருக!
சொல்ல சொல்ல
கேட்காத மனதோ
மந்திரித்த கோழியாய்
உன் பின்னால் அலைய!
என்னானதோ என்னில் ஏனானதோ?

தூண்டில் மீனாய்
உன் விழியில்
என் உயிர் துடிக்க!
பொத்தி வைத்த ஆசைகள் யாவும்
சுனாமியாய் கொல்ல!
இதயமோ
ஆழி பேரலையில்
பேரானந்த தாண்டவம் ஆட!
நானும் இன்று நானாக இல்லையே..!
என்னானதோ என்னில் ஏனானதோ?

மீண்டும் மீண்டும் காதல் செய்வேன்

நீ உலகில் அழகானது எது என சொல்?
என நீ கேட்க
கேள்வியின் முதல் எழுத்து
என நான் சொல்ல..!
இதழ் சுழித்து
விழி சுருக்கி
ஓரக்கண்னால்
நீ சிரிக்க..!
சட்டென சிவந்த
பூமுகம் சிந்திய வெட்கப் பூக்கள்
மீண்டும் மீண்டும்
எனை உன்மேல்
காதல் கொள்ளச் செய்யுதடி..!

என் உயிர் நீதானே!

உன் கண் தீண்டலில்

இதழ் அசைவில்

மூர்ச்சையாகிறேன்…!

சுவாசமாய் என்னுள் வந்தாய்

என் நரம்புகளில் உன் காதல் வாசம்…!

 

உன்னிடம் தொலைவதற்காய்

காத்திருந்த என் இதயம்

சொன்னது…

அனு அனுவாய்.. கொல்லும்

உன் நினைவுகள்

உன்னதமான இம்சை என்று…!

 

என் காத்திருப்பின் வலிகள்

நீர்த் திவலையாய் விழியோரம் சிந்த…

என் முகம் நிமிர்த்தி

உன் மௌன இதழ்களால்…

என் விழி நீர்

நீ துடைத்த வேளை..!

உள்ளம் சொன்னது…

இவள் தான்

உன் உயிர் என்று!

யாரோ நீ யாரோடி?

யாரோ நீ யாரோடி

ஜீவனுக்குள் ஒன்றானவளோ!

உயிர்த்துடிப்பினில் கலந்தவளோ !

நெஞ்சமஞ்சமதில் புகுந்தவளோ!

யாரோ நீ யாரோடி?

 

பனிக்காற்றின் சாரலாய்

மாலைத் தென்றலாய் நீ

கடந்து சென்றதும் உயிரும் உறையுதடி!

என் இதயம் பறிபோனதடி!

பூக்களின் ஸ்பரிசம்

உன் விரல் தொடக் கண்டேன்

மென்மையின் உச்சமடி நீ!

யாரோ நீ யாரோடி?

 

குழம்பிய எனை

நீங்கிச் சென்றாய்!

நீண்ட இரவைத் தந்தாய்!

தனிமைத்தீயில் தவிக்க விட்டாய்!

உயிரின் வலி உணரவைத்தாய்!

உடலும் உயிரும் நீயாகி!

என்னை முழுமையாக்க!

வந்தவள் நீ என்று

புத்திக்கு புரிய வைத்தாய்!

நீங்காத சொல்…

நீங்காத சொல்லானாய் நெஞ்சினில்

சொல்லாய் வடிக்க…

சொல்லை எடுக்க…

சொல்தான் வருமோ?

சொல்லில் உனை பதிக்க…

 

சொல்லின்றி சொல்லாமல்

நீங்காத சொல்லாய்

என் நெஞ்சினில்….

சொல்லாத என் காதல் …

Next Page »