அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for August, 2011

கரைந்தது கர்வம்…

மெல்லிய குளிரென காற்று

இதமான நிலவினொளி

முகமலர்ந்து வானம் கண்டேன்

 

அளவான புன்னகையில்

அம்பை வீசீனாள் வானழகி

எனைமயக்கும் அழகி நீயல்ல

உன்னழகை வென்றவள் 

என் இதயம் வென்றவள்

எனதுரைத்து நகைத்தேன் நான்

 

கர்வம் கொண்ட கண்களால்

இல்லை என்றவள் 

சட்டென மறைந்தாள்

 

மின்னலொன்று ஒளிர்ந்திற்று

அறிந்துகொண்டேன்

என்னவளை பிரதியெடுக்க அவளனுப்பியதென

 

கண்ட நொடி கடந்ததும்

இடியென ஒப்பாரியிட்டவள்

கண்ணீர் சிந்தி அழுதாள்

 

அக்கண்ணீர் துளிதனில்

அவள் கர்வம் கரைந்தது . . .


என் சமுதாயம் …

சுயநலப் பேய்கள் கொட்டமடிக்கும்

சுடுகாட்டு மனங்களோடு

பிணந்தின்னி கழுகுகளாய்

வாழும் நயவஞ்சக

கூட்டம் நிறைந்த

உன்னத சமுதாயம்..

 

மேற்கத்திய கலாச்சார போதையில்

ஆடையில் கஞ்சத்தனம் செய்து

கண்களில் காமம் தெளித்துவிட்டு

பார்வையில் விசாலம் வேண்டுமென்று

பேசும் நாகரீகச் சமுதாயம்

 

மதுவிலும் மாதுவிலும்

இளமையினை தொலைத்து விட்டு

கால்மேல் கால்போட்டு

பெரியோரை பெருசு

என அழைக்கும்

பண்புள்ள சமுதாயம்…..

 

தாய் தந்தையினரை பராமரிக்க

முதியோர் இல்லங்கள் கட்டும்

மனிதமுள்ள சமுதாயம்….

 

அன்பும் அறனும் பண்பும் பாசமும் மனிதமும்

பூத்துக்குலுங்கிய மனங்களை மலடாக்கிவிட்டு

சமூகம் சீரழிந்துவிட்டது என

புலம்பி நிற்கும் என் சமுதாயம்

நட்பின் நினைவு

தனிமையின் அமைதியில்

கடந்த கால நினைவுகளில்

சிறிது நேரம் கரையவிட்டேன்

மனதினை….

 

சின்ன சின்ன சண்டைகள்

காரணம் தெரியாத கோபங்கள் ..

சிலநேர மௌனம்

பலநேர நெருக்கம்

மனத்திரையில் தோன்ற

முகிலும் சிந்தியது கண்ணீர்..!

முதன் முதலாய் உணர்ந்தேன்

குடைபிடிக்கும் உன் கரங்கள்

அருகிலில்லை என்பதினை

 

வலிகளை

காயங்களை

கண்ணீரை

உலகினின்று சாமானியமாய்

மறைத்த என் மனது

ஏனோ..!

எப்படி மக்கா இருக்க?

என நீ கேட்கும் போது மட்டும்

எனை கேளாமலேயே

என் துன்ப உளறல்களை

உன் வசம் சேர்க்கும் வேளைகளில்

தோள்சாய்த்து

தலைகோதி நீ

தந்த ஆறுதல் மொழிகளில்

உயிர் சிலிர்த்துப்போனதுண்டு

உன் தோழமையின்

ஆழம் கண்டு….

 

தேவையில் அரவணைத்து

துன்பத்தில் துணை நின்று

மகிழ்ச்சியில் உடன் மகிழ்ந்து

தன்னலம் மறந்து

எனை எனதாகவே

இருக்கச்செய்த நட்பே

கால சக்கரத்தில் சிக்கி

வெவ்வேறு திசைகளில்

நாம் சிதறி இருந்தாலும்

என்றுமே என்மனதில்

நீங்காது நிறைந்திருக்கும்

நம் நட்பின் நினைவுகள்

 

புரிந்த நட்பிற்கு

தொலைவும் தூரமில்லை

பிரிவும் நிரந்தரமில்லை

என்ற நம்பிக்கையில்

நம் நட்பின் நினைவுகளில்

புதைந்த மனதினை

மீண்டும் இழுந்துவந்தேன்

நிகழ்காலத்திற்கு….