அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for January, 2015

என்னானதோ ஏனானதோ?

என்னானதோ ஏனானதோ!
என்னில் நான் அறியா நான் இன்று!
என்னானதோ என்னில் ஏனானதோ?

மழலை சிரிப்பில்
மந்திர பூக்களை சுவாசத்தில்
சிதறவிட்டாய்!
நரம்பெல்லாம் ஜில்லென
காதல் காற்று!
சிந்தையில் காதல் பித்து!
என்னானதோ என்னில் ஏனானதோ?

தேகமோ காதல் தீயில்
மெழுகாய் உருக!
சொல்ல சொல்ல
கேட்காத மனதோ
மந்திரித்த கோழியாய்
உன் பின்னால் அலைய!
என்னானதோ என்னில் ஏனானதோ?

தூண்டில் மீனாய்
உன் விழியில்
என் உயிர் துடிக்க!
பொத்தி வைத்த ஆசைகள் யாவும்
சுனாமியாய் கொல்ல!
இதயமோ
ஆழி பேரலையில்
பேரானந்த தாண்டவம் ஆட!
நானும் இன்று நானாக இல்லையே..!
என்னானதோ என்னில் ஏனானதோ?