அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

காதல் தேவதை

கனவினில் வளர்பிறையாய் வந்தவள்
விழிவழி மலர்கணை தொடுக்க…
சிந்தையில் காதல் விருந்தொன்று!

பிறைவடம் சூடி பூவையவள்…
சோலையாய் அருகில் வந்தாள்!
பொய்கை வண்டாய் மனம் பறக்க…
தோள்வளை பற்றி கூட்டி வந்தாள்!

ரதியினம் மண்டியிடும் வதனம் இவள்…
மயக்கும் மழலை பேச்சி இவள்…
மன்மத வாகனம் இவள்…
எந்தன் கவிதைகளின் முகவரி இவள்!

காதல் தேவதை
உந்தன் விரல்கள் எழுதும் சுகவரிகள்…
உள்ளத்தில் இன்ப மழை தூவ…
நெஞ்சினில் காதல் நதியின் ஊற்று!

உன் மரகத அதரம் தந்த மதுரசம்…
காதல் போதையில்!
உன்பெயரே இசைத்தபடி…
தள்ளாடுதே என் இதயம்!

காதல் பிணிக்கு மருந்தானாய்…
உந்தன் இதய வாசனை அறிந்தேன்!
காலங்கள் ஓடினாலும்…
உன் நினைவின்றி நகராதே என் நாட்கள்!

No comments yet. Be the first.

Leave a reply