January 7, 2019
மௌன மொழிகள்
கண்கள் தீண்ட
காதல் ஊற்று!
கவிதையாய் வழிந்தோட
வார்த்தைகள் அணைபோட!
சிக்கிக்கொண்டு தவிக்குதடி
என் காதல்!
ஓரடிக்கோரடி உன்பெயர்
முனுமுனுக்கும் இதயம்!
காரணம் கேட்டால்
காதல் என்று பிதற்றும்!
சிந்தையில் ஆயிரமாயிரம்
எண்ணங்கள் பூக்கும்!
கவிதை வடிக்க எத்தணித்தால்
ஒளவியம் கொண்ட மொழியோ
சொல் தர மறுக்கும்!
என்செய்வேன் அன்பே?
ஆ… முத்தம் ஒன்று
தந்துவிடவா?
நம் உதடுகள் உரசும்
வேளையில்!
என் இதயத்தின்
மௌன மொழிகளை
மொழிபெயர்த்திடு அன்பே!