அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for July, 2013

பிறந்தநாள் பரிசாக..!

ஈரைந்து மாதங்கள்

அன்னை தன்  கருவறையில்

ஓவியமாய் உனை செதுக்க…

அழகோவியமாய் கால்பதித்தாய்

இப்புவியினில்..!

 

நீ பிறந்த அன்றே

பிரம்மனும் முடிவுசெய்து விட்டானாம்…

இனியும் படைப்பதில்லை

இன்னொரு வெண்ணிலவை இப்புவியினில்..!

 

வாழ்த்துக்கள் குவியும் இன்நன் நாளில்

நம் நட்பின் பாசத்தை…

கிருக்கல்களாக்கி அளிக்கிறேன்

உன் பிறந்தநாள் பரிசாக..!

 

உன் வாழ்க்கை

வசந்தத்தில் பயணிக்கவும்…

அன்பு மலர்கள்

உன் சுற்றத்தை சூழவும்…

மகிழ்ச்சி மலர்கள் என்றுமே

உன் இல்லத்தை அலங்கரிக்கவும்…

வாழ்த்தும் அன்பு நட்பு..!

என் உயிர் நீதானே!

உன் கண் தீண்டலில்

இதழ் அசைவில்

மூர்ச்சையாகிறேன்…!

சுவாசமாய் என்னுள் வந்தாய்

என் நரம்புகளில் உன் காதல் வாசம்…!

 

உன்னிடம் தொலைவதற்காய்

காத்திருந்த என் இதயம்

சொன்னது…

அனு அனுவாய்.. கொல்லும்

உன் நினைவுகள்

உன்னதமான இம்சை என்று…!

 

என் காத்திருப்பின் வலிகள்

நீர்த் திவலையாய் விழியோரம் சிந்த…

என் முகம் நிமிர்த்தி

உன் மௌன இதழ்களால்…

என் விழி நீர்

நீ துடைத்த வேளை..!

உள்ளம் சொன்னது…

இவள் தான்

உன் உயிர் என்று!

யாரோ நீ யாரோடி?

யாரோ நீ யாரோடி

ஜீவனுக்குள் ஒன்றானவளோ!

உயிர்த்துடிப்பினில் கலந்தவளோ !

நெஞ்சமஞ்சமதில் புகுந்தவளோ!

யாரோ நீ யாரோடி?

 

பனிக்காற்றின் சாரலாய்

மாலைத் தென்றலாய் நீ

கடந்து சென்றதும் உயிரும் உறையுதடி!

என் இதயம் பறிபோனதடி!

பூக்களின் ஸ்பரிசம்

உன் விரல் தொடக் கண்டேன்

மென்மையின் உச்சமடி நீ!

யாரோ நீ யாரோடி?

 

குழம்பிய எனை

நீங்கிச் சென்றாய்!

நீண்ட இரவைத் தந்தாய்!

தனிமைத்தீயில் தவிக்க விட்டாய்!

உயிரின் வலி உணரவைத்தாய்!

உடலும் உயிரும் நீயாகி!

என்னை முழுமையாக்க!

வந்தவள் நீ என்று

புத்திக்கு புரிய வைத்தாய்!