அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for September, 2011

வெட்கப்பூக்கள்…

எங்கேயடி வைத்திருக்கிறாய்

உன் வெட்கப்பூக்களை ஒளித்து..?

என் விழி தீண்டும் நேரங்களிலெல்லாம்

மறக்காமல் பூத்துவிடுகின்றதே

உன் வெட்கப்பூக்கள்…

வெட்கப்பூக்களை ரசிக்கவே

மீண்டும் மீண்டும் உனை

தீண்டத்தோணுதடி…

பைத்தியக்கார உலகம்…

மான் விழியால்

மன்மத பாணம்

எய்தாய் அதை

தூரிகையாக்கி

உன் மௌனமொழிகளுக்கு

உயிர் கொடுத்தேன்

வார்த்தைகளாய்…

என்ன ஆச்சர்யம்

என்னையும் கவிஞன்

என்றார்கள்…!

பைத்தியக்கார உலகம்

என்பது இதுதானோ..?

நம் பண்பாடு…

நாகரீகம் எனும்

கோமாளித்தனத்தில் சிக்கி

இரவு நேர கேளிக்கையிலும்

மதுவிலும் மதி இழந்து

சிற்றின்ப தீண்டலில் மூர்ச்சையாகி

நட்சத்திர குளத்தில்

மிதக்கிறது

உயிரற்ற சடலமாய்…!

ஆசிரியர்கள்

கல்விக்கண் தந்த

கருணை தெய்வங்கள்

புத்தக அறிவோடு

உலக அறிவையும்

புகட்டிய புண்ணியவான்கள்

கரடுமுரடான மனங்களையும்

நல் ஓவியமாய் செதுக்கும்

வித்தை தெரிந்த சிற்பிகள்

 

கிண்டல்கள் கேலிகளினால்

உம்மனம் நோகச்செய்த போதும்

பிள்ளைகளாய் எமை மன்னித்து

எமது முன்னேற்றத்தில் மட்டுமே

கவனம் செலுத்திய மாமனிதர்கள்

 

தண்டிப்பதில் தந்தையாய்

அன்பினில் தாயாய்

நல் வழிகாட்டியாய்

எமை நடத்திய ஆசான்களே

காலங்கள் மாறினாலும்

உம்மீது நாங்கள் கொண்ட

மதிப்பும் அன்பும் என்றுமே

மாறாது

 

ஆசிரிய தின வாழ்த்துக்களுடன்,

சகாய டர்சியூஸ் பீ