அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for April, 2010

சொல்ல நினைக்கிறேன்

ன்பென்ற மழையில் நான் நனைய!

யிரம் மின்னலை என்னுள் பாய்சியவளே!

தயத்தில் நீ வசிக்க!

ந்திடுவேன்! இன்னுயிரையும் உனக்காய்!!!

ன்முகம் கண்டு பேசமட்டும், ஏனோ?

மையானதடி!!! என் நாவு!

ன் இரவெல்லாம் எழுதிய மடல்கள்! தினமும்

ங்கும் இன்றாவது உன்வசம் சேர்ப்பேனா? என்று!

யமின்றி சொல்லிடுவேன் காதலை நிலவறையில்!

ருமுறையேனும் உன்னிடம் சொல்ல!

ராயிரம் தயக்கம்!!! நிச்சயம் சொல்லிடுவேன் என்காதலை!!!

வை வயதை நீ அடையும் முன்னே!!!

சிகரெட்

விரலோடு எனை சேர்த்து!

இதழோடு எனை கோர்த்து!

உயிர் வரை உறிஞ்சி விடு!

கரம் நடுங்கி

நாடி அடங்க

நானும் தருவேன்

மரணம்! எனும்

முத்தத்தை பரிசாக!

சிகரெட்!!!

பேனா

உன் காதல் சொல்ல

எனை ஏன் வதைக்கிறாய்

தினமும்

உயிர் நோக போராடி

சோர்ந்து விட்டேன்

இன்றாவது சொல்லிவிடு

காதலை அவளிடம்

இப்படிக்கு

பேனா

கணினி பொறி

கணினி என்ற பொறிக்குள்

தெறிந்தே மாட்டிக் கொண்ட

கணினிப் பொறியாளர்கள் நாங்கள்

தூக்கத்தை விலை கொடுத்து

பெற்றோம் பட்டத்தை

வருங்காலம் வளமாய் ஆகுமென்று

இன்றோ தூக்கமே பறிபோனதாய்

உலகெங்கும் உண்டாம் சட்டம்

நாளொன்றுக்கு எட்டு மணி நேரம்

வேலை என்று

ஏனோ எங்களுக்கு மட்டும் விதிவிலக்காய்

கசங்காமல் இருப்பது என்னவோ

எங்களின் ஆடைகள் மட்டும்தான்

உள்ளமோ கந்தலையும் விஞ்சி

நார் நாராய் கிழிக்கப்பட்டு

நாளை நிச்சயமில்லை வேலை

அறிந்தும் தொடர்வோம்

கண்ணுறக்கம் இன்றி

தொடர் முயர்ச்சிகளால்

சாதனைகள் பல புரிந்தாலும்

அயல் தேசம் எல்லாம்

சுற்றி வந்தாலும்

மனம் மட்டும் ஏனோ

நிம்மதிக்காய் ஏங்கி நிற்கும்

என்ன மக்கா எப்படி இருக்க

ஆளையே காணும் என்ற

நண்பர்களின் விசாரிப்புகளும்

சாப்பிட்டியா? என்று அன்போடு

விசாரிக்கும் அம்மாவின் அழைப்பிர்க்கும்

நேரமில்லை என ஒற்றை வரியில்

பதில் தந்து அழைப்பை துண்டிக்கும் போதும்

விழி ஓரம் நீரும்

மனதினூடே என்னடா வாழ்க்கை

என்ற எண்ணமும்

துளிர் விடத்தான் செய்கிறது

சிறு குழந்தையாய்

சிறகடித்து பறக்க

இதயம் ஆசைப்பட்டாலும்

மீண்டும் சிறைப்படுத்தினோம் மனதை

கணினி என்ற பொறிக்குள்

இதுதான் வாழ்க்கை என்று.

சிட்டாய்

இமை மூடாமல்

உனை இரசிக்கும்

எனது விழிகள்

உன்னிடம் பேசும்

போதும் மட்டும்

நொடிக்கு ஐம்பது முறை

சிறகடிக்கும் சிட்டாய்

பறக்க முயல்வதன்

மாயம்தான் என்ன!

நீரோடை

தெளிந்த நீரோடையும்
தன் மௌனத்தை
கலைத்ததடி நீ
சீண்டியதும்!

சுவை

தேன்கூட

கசந்ததடி

உன் முத்தத்தை

சுவைத்த பிறகு!

சுவாசம்

காற்றிலும் உன் காதலை

உணர்கிறேனடி

என் சுவாசமே

காதலாகிப் போனதால்

ஏளனம்

உன் வீட்டு

கரடி பொம்மையும்

எனை ஏளனம் செய்யுதடி

நீ தினமும் அதை

கட்டிப்பிடிப்பதினால்

தாலாட்டு

இதயத்தில் நீ உறங்க

தருவேன்

அதன் துடிப்பை

தாலாட்டாக…

Next Page »