அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

யாரோ நீ யாரோடி?

யாரோ நீ யாரோடி

ஜீவனுக்குள் ஒன்றானவளோ!

உயிர்த்துடிப்பினில் கலந்தவளோ !

நெஞ்சமஞ்சமதில் புகுந்தவளோ!

யாரோ நீ யாரோடி?

 

பனிக்காற்றின் சாரலாய்

மாலைத் தென்றலாய் நீ

கடந்து சென்றதும் உயிரும் உறையுதடி!

என் இதயம் பறிபோனதடி!

பூக்களின் ஸ்பரிசம்

உன் விரல் தொடக் கண்டேன்

மென்மையின் உச்சமடி நீ!

யாரோ நீ யாரோடி?

 

குழம்பிய எனை

நீங்கிச் சென்றாய்!

நீண்ட இரவைத் தந்தாய்!

தனிமைத்தீயில் தவிக்க விட்டாய்!

உயிரின் வலி உணரவைத்தாய்!

உடலும் உயிரும் நீயாகி!

என்னை முழுமையாக்க!

வந்தவள் நீ என்று

புத்திக்கு புரிய வைத்தாய்!

No comments yet. Be the first.

Leave a reply