அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for October, 2014

உணர்ந்தேன் காதலை

நிலவு தேவதை
உலவு வரும் வேளை
வாடையோ மலரின்பால்
மையல் கொண்டு தென்றலாய் வீச
கனவுலகில் நான்..!

இதழோரம் சிறுநகை பிறக்க
காரணம் தேடி
புறப்பட எத்தனிக்க
இதயம் சொல்லியது
நினைவலையில் சிலநொடிகள்
நீ நின்று சென்றாய் என்று ..!

அப்போதுதான் உணர்ந்தேன்
இது காதல் என்று..!

மீண்டும் மீண்டும் காதல் செய்வேன்

நீ உலகில் அழகானது எது என சொல்?
என நீ கேட்க
கேள்வியின் முதல் எழுத்து
என நான் சொல்ல..!
இதழ் சுழித்து
விழி சுருக்கி
ஓரக்கண்னால்
நீ சிரிக்க..!
சட்டென சிவந்த
பூமுகம் சிந்திய வெட்கப் பூக்கள்
மீண்டும் மீண்டும்
எனை உன்மேல்
காதல் கொள்ளச் செய்யுதடி..!