October 8, 2014
உணர்ந்தேன் காதலை
நிலவு தேவதை
உலவு வரும் வேளை
வாடையோ மலரின்பால்
மையல் கொண்டு தென்றலாய் வீச
கனவுலகில் நான்..!
இதழோரம் சிறுநகை பிறக்க
காரணம் தேடி
புறப்பட எத்தனிக்க
இதயம் சொல்லியது
நினைவலையில் சிலநொடிகள்
நீ நின்று சென்றாய் என்று ..!
அப்போதுதான் உணர்ந்தேன்
இது காதல் என்று..!