அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for November, 2011

நீங்காத சொல்…

நீங்காத சொல்லானாய் நெஞ்சினில்

சொல்லாய் வடிக்க…

சொல்லை எடுக்க…

சொல்தான் வருமோ?

சொல்லில் உனை பதிக்க…

 

சொல்லின்றி சொல்லாமல்

நீங்காத சொல்லாய்

என் நெஞ்சினில்….

சொல்லாத என் காதல் …

உன் மௌனம்…

கீறாமல் துண்டானது

என்

இதயம்…

உன்

நொடிப்பொழுது

மௌனம்…

அழகிய கவிதை..!

உயிரையும் மெய்யையும் உருக்கி

உயிர்மெய் கலந்து

கவிதைகள் பல படைக்கிறேன்

நித்தமும்

ஆனாலும்

உன் உதடு உதிர்க்கும்

..ம்ம்போல்

அழகாய் இருப்பதில்லை

எதுவும் . . .