அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

என் உயிர் நீதானே!

உன் கண் தீண்டலில்

இதழ் அசைவில்

மூர்ச்சையாகிறேன்…!

சுவாசமாய் என்னுள் வந்தாய்

என் நரம்புகளில் உன் காதல் வாசம்…!

 

உன்னிடம் தொலைவதற்காய்

காத்திருந்த என் இதயம்

சொன்னது…

அனு அனுவாய்.. கொல்லும்

உன் நினைவுகள்

உன்னதமான இம்சை என்று…!

 

என் காத்திருப்பின் வலிகள்

நீர்த் திவலையாய் விழியோரம் சிந்த…

என் முகம் நிமிர்த்தி

உன் மௌன இதழ்களால்…

என் விழி நீர்

நீ துடைத்த வேளை..!

உள்ளம் சொன்னது…

இவள் தான்

உன் உயிர் என்று!

No comments yet. Be the first.

Leave a reply