அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for January, 2010

முட்கள்…

ரோஜாவிற்கு முட்கள் அழகுதான்
ஆனால் ஏன்
என் இதய தோட்டத்தில்
ஈன்றெடுத்த ரோஜாவின்
இதழ்களின் மேலும்
முட்கள்?

எப்படியடி…

எப்படியடி உன்னால்
மட்டும் முடிகிறது
உன்னைக் கிள்ளி
என்னை அழவைக்க…

தேவாமிர்தம்…

தேவலோக தேவர்களெல்லாம்

என் மீது கடுங்கோபத்தில்

உள்ளனராம்

தேவாமிர்தமான உன்னை

நான் கொள்ளை

கொண்டுவிட்டதால்…

இதயத்தில்…

கூப்பிடும் தூரத்தில் நீ இல்லை….
ஆனாலும்
என்னைவிட்டு தொலைவிலும்
இல்லை
என் இதயத்துள்
நீ இருப்பதால்…..

இதயமே அணையாக…

சிறு சிறு துளியாய்
எனில் சேர்ந்த
உன் நினைவுகள்
இன்று..
காட்டாற்று வெள்ளமாய்
தடை போட …
அணை வேண்டும்
அன்பே….
தருவாயா??
உன் இதயத்தை..
அணையாக…….

வெறுமையாய்…

நண்பர்கள் புடை சூழ
நகைத்து மகிழும் போதும்
என்னுள் ஏனோ…
வெறுமையாய் ஒரு உணர்வு….
என்னுடன்
நீ
இல்லை என்பதாலா?

மென்மை

செடியை விட்டு..
பிரியும் போதுகூட..
சிரிக்கிறதே ரோஜா…
பறிப்பவள்…
என்னவள் என்பதாலா?

நீ பேசாவிடில்…

நித்திரையில் இம்சையடி நீ…
தினமும் நான் ரசிக்கும்
கவிதையடி நீ…
உன் இதழசைவில் உணர்ந்தேனடி
என் தாய்மொழியின் இனிமையினை…
மழலை மொழியும் கசக்குமடி எனக்கு…
ஓர் நாள் நீ பேசாவிடில்…

களைப்பு….

ஏன் என்று தெரியவில்லை அன்பே!
உன் விரல் பற்றி
ஓர் நாள் முழுவதும்
நான் நடந்தாலும்
என் கால்கள்
ஏனோ…
களைப்பை
அறிவதில்லை…

பூக்களுக்குள் வன்முறை…

மென்மை பூக்களுக்குள்ளும்
வன்முறையாம் இன்று!!!
பூவையாகிய…
உன் கூந்தலில் யார்
அமரப் போவதென்று…

Next Page »