அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for the 'இதயத்தின் ஓசைகள்' Category

உன் மௌனம்…

கீறாமல் துண்டானது

என்

இதயம்…

உன்

நொடிப்பொழுது

மௌனம்…

அழகிய கவிதை..!

உயிரையும் மெய்யையும் உருக்கி

உயிர்மெய் கலந்து

கவிதைகள் பல படைக்கிறேன்

நித்தமும்

ஆனாலும்

உன் உதடு உதிர்க்கும்

..ம்ம்போல்

அழகாய் இருப்பதில்லை

எதுவும் . . .

வெட்கப்பூக்கள்…

எங்கேயடி வைத்திருக்கிறாய்

உன் வெட்கப்பூக்களை ஒளித்து..?

என் விழி தீண்டும் நேரங்களிலெல்லாம்

மறக்காமல் பூத்துவிடுகின்றதே

உன் வெட்கப்பூக்கள்…

வெட்கப்பூக்களை ரசிக்கவே

மீண்டும் மீண்டும் உனை

தீண்டத்தோணுதடி…

பைத்தியக்கார உலகம்…

மான் விழியால்

மன்மத பாணம்

எய்தாய் அதை

தூரிகையாக்கி

உன் மௌனமொழிகளுக்கு

உயிர் கொடுத்தேன்

வார்த்தைகளாய்…

என்ன ஆச்சர்யம்

என்னையும் கவிஞன்

என்றார்கள்…!

பைத்தியக்கார உலகம்

என்பது இதுதானோ..?

கரைந்தது கர்வம்…

மெல்லிய குளிரென காற்று

இதமான நிலவினொளி

முகமலர்ந்து வானம் கண்டேன்

 

அளவான புன்னகையில்

அம்பை வீசீனாள் வானழகி

எனைமயக்கும் அழகி நீயல்ல

உன்னழகை வென்றவள் 

என் இதயம் வென்றவள்

எனதுரைத்து நகைத்தேன் நான்

 

கர்வம் கொண்ட கண்களால்

இல்லை என்றவள் 

சட்டென மறைந்தாள்

 

மின்னலொன்று ஒளிர்ந்திற்று

அறிந்துகொண்டேன்

என்னவளை பிரதியெடுக்க அவளனுப்பியதென

 

கண்ட நொடி கடந்ததும்

இடியென ஒப்பாரியிட்டவள்

கண்ணீர் சிந்தி அழுதாள்

 

அக்கண்ணீர் துளிதனில்

அவள் கர்வம் கரைந்தது . . .


வெட்கமே போதும்

அரிதாரம் வேண்டாமடி
உன்னை அழகாக்க
உன் வெட்கம் ஒன்றே போதும்...

உன் விழி துடித்தால்….

துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு  

கார்மகள் இடியாய் ஒப்பாரியிட!

நெஞ்சங்கலங்கிய முகில்களும் 

மின்னலாய் மிரட்டலிட!

காரிருளும் சூழ்ந்தது வானுலகை

இனியும் தாமதித்தால் ஆபத்து 

பயந்த வருணனும்!

பாய்ந்தோடி வந்தான் புவிமீது 

சாரலாய் உனைக்காக்க…!  

கொஞ்சம் காதல் பேசுவோமா…

உறக்கத்தின் உரையாடலில்

தைரியாமாய் சொல்கிறேன்

என் காதலை – ஆனால்

உன்னுடன் இருக்கையிலே

தவியாய் தவிக்கிறேன்

சொல்வதற்கு . . .

 

நண்பர்களுக்கு வீராவேசாமாய்

காதல் சொல்ல கற்றுக்கொடுக்கும்

என் நாவும் ஏனோ

உன்னிடம் காதலைச்சொல்ல

வரும்போது மட்டும்

நடுக்கத்தில் நடனமாடுதடி…!

 

ஏதோ பேசனும்ன்னு வரச்சொன்னீங்க

ம்ம்சொல்லுங்க

என என் விழி நீ பார்த்த நொடி

என் இதயத்துள் ஏதோ ரசாயண மாற்றம்..!

 

பேசுவதற்கு

கோடி வார்த்தைகள் இருந்தும்

உதடுகள் ஏனோ அசையவில்லை

ஆணுக்கும் வீரம் உண்டாம்

எந்த மடையன் சொன்னது..?

விடியட்டும் என் இரவுகள்

என்னில் எனைத் தின்று

விரைவாய் வளரும்

உன் நினைவுகளை

மறக்க வழிதேடுகிறேன்

தினமும்

என் விடியா இரவுகளில்

 

அழுதே வற்றிய

என் விழிகளும்

உன் பெயர் சொல்லியே

ஓய்ந்த என் உதடுகளும்

உன் காதலையே

சுவாசித்த என் இதயமும்

இறுதியாய் காத்திருக்கின்றன

உன் வரவிற்காய்

 

உனக்குள் ஈரமிருந்தால்

ஒருமுறை எனைசந்தித்து

நீ எனை மறந்தது போல்

உனை மறக்க வழிதனை

சொல்லிவிட்டுப்போ . . .

 

விடியட்டும் என் இரவுகள்…  

ஆய்வறையில் இதயம்

உன் விழி அம்பால்

காயப்பட்ட என் இதயம்

இன்று ஆய்வறையில்

அணுக்கருவை விட..!

அதீத சக்தி

வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு…!

« Previous PageNext Page »