அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

கொஞ்சம் காதல் பேசுவோமா…

உறக்கத்தின் உரையாடலில்

தைரியாமாய் சொல்கிறேன்

என் காதலை – ஆனால்

உன்னுடன் இருக்கையிலே

தவியாய் தவிக்கிறேன்

சொல்வதற்கு . . .

 

நண்பர்களுக்கு வீராவேசாமாய்

காதல் சொல்ல கற்றுக்கொடுக்கும்

என் நாவும் ஏனோ

உன்னிடம் காதலைச்சொல்ல

வரும்போது மட்டும்

நடுக்கத்தில் நடனமாடுதடி…!

 

ஏதோ பேசனும்ன்னு வரச்சொன்னீங்க

ம்ம்சொல்லுங்க

என என் விழி நீ பார்த்த நொடி

என் இதயத்துள் ஏதோ ரசாயண மாற்றம்..!

 

பேசுவதற்கு

கோடி வார்த்தைகள் இருந்தும்

உதடுகள் ஏனோ அசையவில்லை

ஆணுக்கும் வீரம் உண்டாம்

எந்த மடையன் சொன்னது..?

No comments yet. Be the first.

Leave a reply