September 15, 2011
ஆசிரியர்கள்
கல்விக்கண் தந்த
கருணை தெய்வங்கள்…
புத்தக அறிவோடு
உலக அறிவையும்
புகட்டிய புண்ணியவான்கள்…
கரடுமுரடான மனங்களையும்
நல் ஓவியமாய் செதுக்கும்
வித்தை தெரிந்த சிற்பிகள்…
கிண்டல்கள் கேலிகளினால்
உம்மனம் நோகச்செய்த போதும்
பிள்ளைகளாய் எமை மன்னித்து
எமது முன்னேற்றத்தில் மட்டுமே
கவனம் செலுத்திய மாமனிதர்கள்…
தண்டிப்பதில் தந்தையாய்…
அன்பினில் தாயாய்…
நல் வழிகாட்டியாய்
எமை நடத்திய ஆசான்களே
காலங்கள் மாறினாலும்
உம்மீது நாங்கள் கொண்ட
மதிப்பும் அன்பும் என்றுமே
மாறாது…
ஆசிரிய தின வாழ்த்துக்களுடன்,
சகாய டர்சியூஸ் பீ