அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

உணர்ந்தேன் காதலை

நிலவு தேவதை
உலவு வரும் வேளை
வாடையோ மலரின்பால்
மையல் கொண்டு தென்றலாய் வீச
கனவுலகில் நான்..!

இதழோரம் சிறுநகை பிறக்க
காரணம் தேடி
புறப்பட எத்தனிக்க
இதயம் சொல்லியது
நினைவலையில் சிலநொடிகள்
நீ நின்று சென்றாய் என்று ..!

அப்போதுதான் உணர்ந்தேன்
இது காதல் என்று..!

No comments yet. Be the first.

Leave a reply