அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

ஆசை

கோதி அழகுபார்த்த
தலையில்
நகைக்கும் நரை முடிகள்!

வரிக்குதிரையாய் ஓடியவன்
முகத்தில்
வாலிபம் வரைந்து சென்ற வரிகள்!

ஓடிஓடி செல்வம் சேர்க்க
காலம்
களவாடி சென்ற இளமை!

முண்டியடித்து முன்னேறிட
முறித்து
சென்ற இதயம்!

எதிர்காலம் வளமாக்க
வாழாவெட்டியாக்கப்பட்ட
வாழ்க்கை!

வீராவேசம் பேசிய நாவும்
திமிறிய உடலும்
சூடான இரத்தமும் சுண்டி போக

மரணத்திடம் மண்டியிடும்
தருணம்
ஆசை ஒன்று அனலாய் அவனில்!

விழிகளில் நீர்ப்பூக்க
வறண்டு கிடக்கும் நினைவுகளை
விலக்கிக் கொண்டே ஓடினான்!

மீண்டும் ஒருமுறையேனும்
வாழ்ந்திட வேண்டும்
அவனுக்காக!

No comments yet. Be the first.

Leave a reply