அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

அமைதியைத் தேடி….

வஞ்சத்தால் உள்ளத்தை

உருகுலைத்து

 

சினத்தினால் சிந்தையை

சிதைத்து

 

சுயநலத்தால் இதயத்தை

இருளவைத்து

 

மனிதம் செத்த அறையில்

மனதினை சிறைவைத்து

 

அமைதி வேண்டுமாம்

தேடி

எங்கெங்கோ செல்கிறார்கள்….

 

புத்திகெட்ட மனிதனே..!

மனிதாபிமானம் எனும் சாவி

கொண்டு திறந்துவிடு

மனதினை

 

தூவிடு

நல் எண்ண விதைகளை

சிந்தையில்..

 

உயிர்பெறட்டும்

உன் இதயம்

அன்பினை சுவாசித்தபடி

 

உள்ள அமைதி

உனைத்தேடி வரும்….

No comments yet. Be the first.

Leave a reply