அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

நட்பின் வலி

தைத்தன முட்கள்

இதயத்தில் ரணங்கள்

கண்ணீர் ரணங்களுக்காய் இல்லை

முட்கள் உன் வார்த்தைகள்

என்பதினால்!

 

காதலின் வலிதான் கொடுரமென்றேன்

உன்னிடம் அன்று..!

பொய் அதைவிட

நட்பின் பிரிவே

உணர்த்திவிட்டாய்

நீ இன்று…!

 

நரம்போடு பிணைந்து

சந்தோசம் தந்தாய்

உன் உயரிய

நட்பினால் அன்று…!

கூரிய சொற்களால்

அறுத்தும் விட்டாய்

நரக வேதனையில்

நான் இன்று…!

 

இருந்தும் வாழ்வேன்

உன் நட்பின்

நினைவுகளில்

நட்பை மறந்தது

நீ மட்டும்தானே…!

No comments yet. Be the first.

Leave a reply