May 10, 2010
இயக்கமே
இயற்கையின் அதிசயமே!
பிரம்மனின் மிகச்சிறந்த கலைநயமே!
பிறையும் வளர மறந்ததடி!
உன் நெற்றியின் நினைவுகளினால்!
வண்ணத்துப்பூச்சியும் சிறகடிக்க மறந்ததடி!
உன் இமைகளின் படபடப்பினால்!
துள்ளி ஓடும் மான்களும் விழிமூட மறந்ததடி!
உன் இருவிழியின் அசைவினால்!
ரோஜா இதழ்கூட மலர மறந்ததடி!
உன் இதழ்களின் அழகினால்!
கானகுயிலும் பாட மறந்ததடி!
உன் குரலின் இனிமையினால்!
இயற்கையையே கட்டிப்போட்ட இனியவளே!
உனை ஓர் நொடியேனும் பிரிய நேர்ந்தாலும்
என் இதயமே இயங்க மறக்குமடி!