அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for the 'பிற ஓசைகள்' Category

அம்மா

உனக்காய் மடல் எழுத…

எடுத்தேன் எழுத்தாணியை அந்தியில்…

விழிகளும் பனித்தன…

இதயத்தின் ஓசையில்…

உன் அன்பை…

வரிகளாய் செதுக்க…

வார்த்தைகள் ஏனோ?

இன்னும் மொழியின் கருவறையில்…!

வைகறையும் ஆனது…

ஆனாலும் மடல் மட்டும்…

வெற்றுக் காகிதமாய்…

இறுதியாய் எழுதினேன்…

அன்பு அம்மாவிற்கு…

மகனின் அன்பான…

முத்தங்கள் என்று…

சிகரெட்

விரலோடு எனை சேர்த்து!

இதழோடு எனை கோர்த்து!

உயிர் வரை உறிஞ்சி விடு!

கரம் நடுங்கி

நாடி அடங்க

நானும் தருவேன்

மரணம்! எனும்

முத்தத்தை பரிசாக!

சிகரெட்!!!

கணினி பொறி

கணினி என்ற பொறிக்குள்

தெறிந்தே மாட்டிக் கொண்ட

கணினிப் பொறியாளர்கள் நாங்கள்

தூக்கத்தை விலை கொடுத்து

பெற்றோம் பட்டத்தை

வருங்காலம் வளமாய் ஆகுமென்று

இன்றோ தூக்கமே பறிபோனதாய்

உலகெங்கும் உண்டாம் சட்டம்

நாளொன்றுக்கு எட்டு மணி நேரம்

வேலை என்று

ஏனோ எங்களுக்கு மட்டும் விதிவிலக்காய்

கசங்காமல் இருப்பது என்னவோ

எங்களின் ஆடைகள் மட்டும்தான்

உள்ளமோ கந்தலையும் விஞ்சி

நார் நாராய் கிழிக்கப்பட்டு

நாளை நிச்சயமில்லை வேலை

அறிந்தும் தொடர்வோம்

கண்ணுறக்கம் இன்றி

தொடர் முயர்ச்சிகளால்

சாதனைகள் பல புரிந்தாலும்

அயல் தேசம் எல்லாம்

சுற்றி வந்தாலும்

மனம் மட்டும் ஏனோ

நிம்மதிக்காய் ஏங்கி நிற்கும்

என்ன மக்கா எப்படி இருக்க

ஆளையே காணும் என்ற

நண்பர்களின் விசாரிப்புகளும்

சாப்பிட்டியா? என்று அன்போடு

விசாரிக்கும் அம்மாவின் அழைப்பிர்க்கும்

நேரமில்லை என ஒற்றை வரியில்

பதில் தந்து அழைப்பை துண்டிக்கும் போதும்

விழி ஓரம் நீரும்

மனதினூடே என்னடா வாழ்க்கை

என்ற எண்ணமும்

துளிர் விடத்தான் செய்கிறது

சிறு குழந்தையாய்

சிறகடித்து பறக்க

இதயம் ஆசைப்பட்டாலும்

மீண்டும் சிறைப்படுத்தினோம் மனதை

கணினி என்ற பொறிக்குள்

இதுதான் வாழ்க்கை என்று.

« Previous Page