April 14, 2010
தனியே
மனம் மயக்கும் அந்தி வேளை
கடற் மணலில் தனியாய் கோலமிட
அலையோ இரைச்சலாய் ஓலமிட
மனமோ மந்தியாய் உனை நினைக்க
எழில் பொங்கும் வான் நிலவும்
தீயாய் சுட்டுவிட
வீசும் தென்றலிலே சாம்பலாய்
கரையும் முன்னே
விரைவாய் வருவாய்
காதலியே!
மனம் மயக்கும் அந்தி வேளை
கடற் மணலில் தனியாய் கோலமிட
அலையோ இரைச்சலாய் ஓலமிட
மனமோ மந்தியாய் உனை நினைக்க
எழில் பொங்கும் வான் நிலவும்
தீயாய் சுட்டுவிட
வீசும் தென்றலிலே சாம்பலாய்
கரையும் முன்னே
விரைவாய் வருவாய்
காதலியே!
காற்றை காதலித்ததும் இல்லை
கடல் அலையோடு விளையாடியதும் இல்லை
முழுமதியை இரசித்ததும் இல்லை
இளந் தென்றலோடு உரையாடியதும் இல்லை
கனவோடு உளறியதும் இல்லை
குழந்தையாய் கைகொட்டி சிரித்ததும் இல்லை
இவை அனைத்தும் இன்று என்னில்!!!
மின்னலாய்
உன் ஒற்றைப் பார்வை
என்னில் ஊடுறுவியதால்…
மேகமதை மெத்தையாக்கி
தென்றலினை கீதமாக்கி
என் நெஞ்சமதை தலையணையாய்
தருவேனடி
பூவையே நீ
சிறு துயில் கொள்ள…