அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for April, 2010

தனியே

மனம் மயக்கும் அந்தி வேளை

கடற் மணலில் தனியாய் கோலமிட

அலையோ இரைச்சலாய் ஓலமிட

மனமோ மந்தியாய் உனை நினைக்க

எழில் பொங்கும் வான் நிலவும்

தீயாய் சுட்டுவிட

வீசும் தென்றலிலே சாம்பலாய்

கரையும் முன்னே

விரைவாய் வருவாய்

காதலியே!

ஒற்றைப் பார்வை

காற்றை காதலித்ததும் இல்லை

கடல் அலையோடு விளையாடியதும் இல்லை

முழுமதியை இரசித்ததும் இல்லை

இளந் தென்றலோடு உரையாடியதும் இல்லை

கனவோடு உளறியதும் இல்லை

குழந்தையாய் கைகொட்டி சிரித்ததும் இல்லை

இவை அனைத்தும் இன்று என்னில்!!!

மின்னலாய்

உன் ஒற்றைப் பார்வை

என்னில் ஊடுறுவியதால்…

துயில் கொள்ள

மேகமதை மெத்தையாக்கி

தென்றலினை கீதமாக்கி

என் நெஞ்சமதை தலையணையாய்

தருவேனடி

பூவையே நீ

சிறு துயில் கொள்ள…

நேசிக்கிறேன்

நீ உதிரும் வார்த்தைகளை விட
உன் உதிரா வார்த்தைகளையே
அதிகம் நேசிக்கிறேன்
உன் மௌனத்தின் அர்த்தம்
எனக்கு மட்டுமே புரியும்
என்பதினால்…

எத்தனை முறை சொல்லுவது

எத்தனை முறை சொல்லுவது
பூ பறிக்க செல்லாதே என்று
இப்போது பார்
பூந்தோட்டமே வாடிவிட்டது
உன் அழகு கண்டு நாணி…

« Previous Page