அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for January, 2010

கொள்ளைக்காரி

என்னில் எப்போதும்
உன் நினைவுகள்தான்…
இரவில்கூட
நிம்மதியாய் உறக்கமில்லை…
கனவில்கூட
உனது தொல்லை…
என் இதயத்தைத் தான்
கொள்ளையடித்தாய்
விட்டு விட்டேன்…
ஆனால் இன்றோ???
என் உறக்கத்தையும்
கொள்ளை கொண்டுவிட்டாயே…

துடிக்கும் இதயம்…

உனக்கென்ன!!!
ஒற்றைப் பார்வை
வீசி சென்றுவிட்டாய்…
என் இதயமல்லவா…
விட்டு விட்டு
துடிக்கிறது…

அழகே…

நிலவின் குளுமை
கடலின் அலை
தென்றலின் இதம்
மலரின் மென்மை
மலையின் சாரல்
மழைத்துளியின் ஓசை
இவையனைத்துமே…
அழகென்றேன்!!!
உனைக்கானும் வரை…

மருந்தாக உன் இதயம்…

காணும் பொருட்களெல்லாம்
உன் உருவம்…
கண் மூடினாலும்
உன் பிம்பம்..
உன் நினைவுகள்
நிழலாய் துரத்த…
நிம்மதியை தொலைத்தேனடி…
இதயத்தைத் தானடி
உன்னிடம் இழந்தேன்!!!
ஏனோ!!!
மரணத்தையே…
தொட்டு விட்டதாய்
வலி என்னில்…
இதுகூட இனிமையடி
மருந்தாக…
உன் இதயம் தந்தால்

தண்டனை..

நான் உன்னை
காயப்படுத்தியிருந்தால்
மன்னிக்காதே….
தண்டனையாக..
என்னை..
உன் இதயத்தில்..
சிறை வைத்துவிடு…

இரவுகள்…

என் இரவுகள் எல்லாம்
விடியல்களே
உன் நினைவுகள்
தினமும்….
என்னுடன்
சண்டை பிடிப்பதால்…..

இம்சையடி நீ.

விழி மூடினேன்
உறக்கத்தை வாங்க
ஆனால்…
விலைபோனது என்னவோ..
என் உறக்கம்தான்
கனவினில் நீ..
இம்சித்ததால்

« Previous Page